காலமெல்லாம் உன்னோடு

ebook

By பரிமளா ராஜேந்திரன்

cover image of காலமெல்லாம் உன்னோடு

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

"துர்கா... ஏய்...துர்கா என்ன பண்றே"
குரலில் அதிகாரமும், ஆணவமும் சேர்ந்து ஒலித்தது.
"இதோ வந்துட்டேன்கா... மொட்டை மாடியில் உங்க துணிகளை காயப் போட போனேன்"
அவள் முன் வந்து நின்றாள் பதினெட்டு வயது பருவ மங்கை துர்கா.
தோட்டக்காரன் பேத்தி... எனக்கு நிகராக எவ்வளவு வனப்பும், வசீகரமுமாக இருக்கிறாள். மாநிறமாக இருந்தாலும் களையாக... கடவுள். இந்த ஏழைக்கு இவ்வளவு அழகை வாரி வழங்கி இருக்கிறானே.
அவளை பார்க்கும்போது ஏற்படும் பொறாமை உணர்வு மனதில் தோன்றி மறைந்தது.
"அக்கா... என்ன செய்யணும் சொல்லுங்க"
"என்னோட ரெட் சுடிதார் அலமாரியில் இருக்கு. எடுத்து அயர்ன் பண்ணி கொண்டு வா. அப்படியே சமையல்காரம்மாகிட்டே சொல்லி. வெஜிடபிள் சூப் வாங்கிட்டு வா"
படி இறங்குகிறாள் துர்கா.
பூஜை அறையில். சபேசன் கண்மூடி அமர்ந்திருந்தார்.
பகவானே என் ஒரே மகள் நந்தினி. அவ வாழ்க்கை நல்லபடியாக அமையணும். தாயில்லாத அவளுக்கு ஒரு அன்பான குடும்பத்தை காட்டு.
எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையில் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவன் நான்.
இன்னைக்கு கே.என்... பில்டர்ஸ்னு சிறப்பாக பிஸினஸ் பண்ணிட்டிருக்கிறது காரணம் என்னோட உழைப்பு. என் அப்பா எனக்கு சொல்லி கொடுத்த நேர்மை. அவர் பெயரிலேயே கம்பெனி ஆரம்பிச்சு இன்னைக்கு சிறப்பாக வாழ்ந்திட்டிருக்கேன்சிலீரென்று கண்ணாடி டம்ளர் மாடி அறையில் விழுந்து உடையும் சப்தம் கேட்கிறது.
அதை தொடர்ந்து பளாரென்று அறையும் ஓசையும்,
"உனக்கு அறிவிருக்குதா... ஆள் தான் தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கே. ஒரு டம்ளரை ஒழுங்காக பிடிச்சு கொண்டு வந்து கொடுக்க துப்பில்லை"
நந்தினியின் கோபக்குரல்.
"அக்கா, நான் பார்த்து தான் கொடுத்தேன். நீங்க நான் சரியா பிடிக்காம..."
"எதிர்த்தா பேசறே... போ... இங்கிருந்து..."
வீடே அதிரும்படி நந்தினி கத்த. வேலையாட்கள் பதறியபடி மாடி ஏற, பூஜை அறையிலிருந்து வெளிவந்த சபேசன், இதையெல்லாம் பார்த்தபடி மெளனமாக நிற்கிறார்.
நந்தினியின் இந்த முன் கோபமும், ஆத்திரமும் குறையவே குறையாதா... சின்ன வயதிலிருந்த பிடிவாத குணம்.
தாயில்லாதவள் என்று செல்லம் கொடுத்து வளர்த்ததால், அவள் வளர வளர அவளோடு சேர்ந்து, அவளது பிடிவாத கோப குணமும் அல்லவா... வளர்ந்து கொண்டு போகிறது. மனதில் கவலை சூழ்ந்தது.

காலமெல்லாம் உன்னோடு