விழியிலே மலர்ந்தது

ebook

By ஆர்.சுமதி

cover image of விழியிலே மலர்ந்தது

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

"அண்ணே..."
தாடை முழுவதும் நுரை வெண்தாடி போல் சிரிக்க ஷேவ் செய்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் வசந்தன் வந்து நிற்பதை உணர்ந்து "ம்..." என்றான்.
வசந்தன் இடது கையால் கேசத்தை சரி செய்தவாறே தயக்கமாக கேட்டான்.
"அண்ணே... ஒரு இருபது ரூபா பணம் வேணும்."
கண்ணாடியில் இருந்த பார்வையை எடுத்து வசந்தன் மேல் போட்டான் கார்த்திகேயன்.
அண்ணனுடைய பார்வையை சந்தித்ததும் வசந்தனின் தலை கல்யாண பெண்ணைப் போல சட்டென்று கவிழ்ந்தது.
"எதுக்குப் பணம்?"
"இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. போகணும்."
குரல் ரப்பராக இருந்தது.
"நீயும்ன் எத்தனை. இன்டர்வியூவிற்கு போவே? எதிலேயாவது செலக்ட் ஆகியிருக்கியா? உனக்கு பஸ்ஸுக்கு நான் கொடுத்த பணத்துல உருப்படியாக ஏதாவது வாங்கியிருந்தா கூட உபயோகமாக இருக்கும். உனக்கு அழிச்சதெல்லாம் வேஸ்ட்."
கார்த்திகேயனின் முகத்தில் கடுமை நிலவியது.
"அண்ணே... இந்த தடவை எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும். நம்பிக்கை இருக்கு."
"இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்ன நம்பிக்கையோ என்ன இழவோ?" என்றவன் உள் நோக்கி குரல் கொடுத்தான்"ரேவதி... ஏய் ரேவதி."
ரேவதி உள்ளிருந்து வந்தாள். கார்த்திகேயனின் மனைவி.
"அயர்ன் பண்ணி கொடுக்கச் சொன்னீங்க. சட்டையை அயர்ன் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரேவதிக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க?" என எரிச்சலுடன் கேட்டாள்.
"ஒரு வேலையும் இல்லை. என் பேண்ட் பாக்கெட்ல இருபது ரூபா பணம் எடுத்து இவன்கிட்ட கொடு."
"ஏன்? எதுக்கு பணம்?" கேள்வியே மிகவும் கடுமையாக வந்தது. பார்வை வசந்தனை தாக்கியது.
வசந்தனின் தலை மறுபடியும் கவிழ்ந்தது.
"இன்டர்வியூவுக்குப் போறானாம்."லைப் பாதையை
"ஆமா! போனாலும் வேலையை தூக்கி கையில கொடுத்துடப் போறாங்க தண்டச் செலவு."
"சரி... சரி. குடு."
அண்ணி ரேவதி முறைப்புடன் சென்று எரிச்சலுடன் எடுத்து வந்து வசந்தனின் கையில் திணித்துவிட்டு நின்றாள்.
பணத்தை வாங்கிக் கொண்ட வசந்தன் அறையை விட்டு வெளியே வந்ததும் உள்ளே ரேவதியின் குரல் எரிச்சலுடன் தொடர்ந்தது.
"இதப் பாருங்க... இந்த மாதிரி வெட்டி செலவு செய்யறதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை."
"என்ன பண்ணச் சொல்றே. செய்ய வேண்டிய செலவையெல்லாம் செய்து தானே ஆகணும்."
"நல்லா செய்தீங்க. போடற சோறுதான் தண்டம்ன்னா இதுங்களுக்கு செலவுக்கு வேற கொட்டி அழணும். உங்க அம்மாவுக்கும் உங்க தம்பிக்கும் செய்யற செலவை சேர்த்துவச்சா நம்ம புள்ளைங்களுக்கு உதவும். இதப்பாருங்க. இதுவரைக்கும் செய்த செலவு போதும். உங்க தம்பியை ஒரு வேலையை தேடிக்கிட்டு உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. நமக்கும் புள்ளையும் குட்டியுமா ஆயிடுச்சு. இனியும் நாம அனாவசிய செலவையெல்லாம் செய்துகிட்டு இருக்கக்கூடாது. உங்க தம்பிக்கு வேலை கிடைச்சதும் உங்கம்மாஇங்க இருக்கக்கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்." ரேவதியின் பேச்சுக்கு கார்த்திகேயன் அடங்கிப் போனான்.
கேட்டுக் கொண்டிருந்த வசந்தனுக்கு ரத்தம் கொதித்தது. பெற்ற தாய்க்கு சோறு போடுவதை பாரமாக நினைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை பெருகியது.

விழியிலே மலர்ந்தது