Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
பெண், சமூகத்தின் கண். அவளை நன்கு வாழவைத்தால் சமூகம் தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறது. பெண்ணின் வாழ்க்கைத் தரம் உயராத எந்தச் சமூகமும் முன்னேறி விட்டதாக மார் தட்டிக் கொள்ள முடியாது.
இன்ரே கைநிறைய வருவாய்கொண்டு வரும் பெண்ணை இழந்துவிட மனமில்லாமல் அவளை-அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இல்லறத்தைக் கொடுக்காமல்-வாடிய பயிராக அவள் இளமையெல்லாம் காணலாக விடுகிறரர்கள். வயதோ ஏறுகிறது மன மாலையோ விழுவதில்லை. ஏற்றம் என்று நினைப்பதே சரிவாகி விடுகிறது.
இந்நிலையில் கிடைத்த மணவாழ்வில் அந்த வாடிய பயிர் தழைக்கிறதா பூக்கிறதா என யார் பார்க்கிருர்கள்? பெற்றேர்களோ அன்றி நம் அரசியல் வாதிகளோ அதற் காக எந்த முயற்சியும் செய்வதில்லை. பெற்றேர்களுக்கோ வருவாய் தரும் பெண்ணை இழந்ததில் வருத்தம், அரசியல் வாதிக்கோ ஒட்டுவரை இருந்த எண்ணங்கள் ஒட்டுக்குப்பின் ஆதாயத்தில் போய்விடுகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. போட்ட முதலைத் திரும்ப எடுக்கும் வியாபார மாகிவிட்டது அரசியல்.
இந்நிலையில் இந்தியச் சட்டம் பெண்ணிற்காக எண்ணிறந்த சலுகைகளை அளித்திருக்கிறது. ஆனல் அவள் தன் வாழ்க்கையில் எந்த அளவிற்கு அதைப்பயன்படுத்திக் கொள்கிருள்? பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஊசலாடும் அவளது உணர்வுகளின் உயிர்ப்பே இந்த 'திசை மாறிய பறவைகள்'.
இதில் வரும் கதாநாயகியின் வாழ்வில் நடந்த தவரே சிறியது, அந்தச் சிறிய தவறில் கப்பும் கிளையுமாக கனவுக் கோட்டைகளைக் கட்டிவிடும் இளநெஞ்சங்கள்; சட்டம் சலுகை காட்டினலும், சமூகம் இழித்துக் கூறும் கொடுமை! இதைப் பெண்ணின் உயர்ச்சி என்பதா அல்லது விதி என்பதா?