Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
முதியோர் இல்லத்தில் இருக்கும் லட்சுமியம்மாளைக் காண வருவதை அவள் மகன் அடியோடு நிறுத்திக் கொண்டு விட, மகனைக் காண வேண்டுமென்கிற ஏக்கத்தில் பல நாள் தவித்தாள் அவள். ஒரு கட்டத்தில் "என் மகன் அண்ணாமலையின் முகத்தைப் பார்த்தால்தான் உணவை உண்வேன்" என்று சொல்லி உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்குகிறாள். இல்ல நிர்வாகிகளும் எவ்வளவோ கெஞ்சியும் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் அவளை சித்ரா என்னும் சமூக சேவகி சந்திக்கிறாள்.அவள் மகனைக் கூட்டி வரும் நோக்கத்தில் புறப்பட்டுச் சென்ற சித்ரா, அவன் அந்த ஊரை விட்டே போயிருப்பதைக் கண்டுபிடித்து வேதனையாகிறாள். லட்சுமியம்மாள் மரணப் படுக்கைக்கே போய் விட, வேறு வழியில்லாமல் அவள் மகனின் புது இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அவனைக் கடத்தி வர ஆளை ஏவுகிறாள்.கடத்தி வரப்பட்ட மகன் தாயைச் சந்தித்தானா?...அவனைச் சந்தித்த பின் லட்சுமியம்மாள் உணவருந்தினாளா?நாவலை வாசித்த பின் கண் கலங்காத மனிதர்கள் இருந்தால், அவர்கள் நிச்சயம் மனிதப் பிறவிகளே இல்லை, எனலாம்.