Kaadhalikka Neramillai Uruvana Kathai

ebook

By Kalachakram Narasimha

cover image of Kaadhalikka Neramillai Uruvana Kathai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

எல்லவத்திற்குமே ஒரு காரண காரியம் இருக்கும். ஆங்கில நாளிதழின் பணிகளில் ஈடுபட்டு, பிரஷர் குக்கரின் உள்ளே இருந்த நான், அவ்வப்போது தமிழில் புதினங்களை எழுதி, எனது பிரஷரை ரிலீஸ் செய்வேன். இதுவரை பதினைந்து நாவல்களை எழுதி இருக்கிறேன். எனது புதினங்களை வானதி பதிப்பகம், தி ஹிந்து பதிப்பகம், ஸ்ரீ பதிப்பகம் ஆகியவை வெளியிட்டிருப்பினும், புஸ்தகாவில் இப்போதுதான் நான் காலடி எடுத்து வைக்கிறேன்.

கொரோனா கோர தாண்டவமாடி அனைவரையும் வீடு சிறையில் வைக்க, பொழுது போகாமல், முகநூல்களில் முக்கியமான கொலை வழக்குகளை பற்றி எழுதி வந்தேன். அப்போது ஒரு முகநூல் நண்பர், கொரோனா சமயத்தில் கொலைக்கதைகள் எதற்கு ? உங்கள் அப்பாவை போன்று நகைச்சுவை விஷயங்களை எழுதுங்களேன். குறிப்பாக காதலிக்க நேரமில்லை உருவான கதையை பற்றி கூறுங்களேன். பொழுது போகும் '' என்று லட்சுமி நாராயணன் என்பவர் வேண்டியிருந்தார். விளையாட்டாகத்தான் காதலிக்க நேரமில்லை உருவான கதையை எழுத துவங்கினீன். அது பெரும் ஆதரவும், வரவேற்றும் பெற்று, இன்று புஸ்தகாவில் இடம் பெற்று விட்டது.

காதலிக்க நேரமில்லை உருவான விதம், காரணம், அனைத்தையுமே, நகைச்சுவை மற்றும் ஸ்வாரஸ்ய சம்பவங்களாக விவரித்திருக்கிறேன். எனது தந்தை இந்த படத்தின் வசனகர்த்தா சித்ராலயா கோபு அவர்கள், எனது பால்யத்திலிருந்தே எனக்கு விவரித்த சம்பவங்கள், இயக்குனர் ஸ்ரீதர், சி வி ராஜேந்திரன், காஞ்சனா, முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு ஆகியோருடன் பேசும் பொது அவர்கள் தெரிவித்த சுவையான சம்பவங்கள், அனைத்தையும் திரட்டி காதலிக்க நேரமில்லை உருவான கதையை கூறியிருக்கிறேன்.

ஒரு மாலை பொழுதில் பீச்சுக்கு காற்று வாங்க சென்ற ஸ்ரீதரும்-கோபுவும் எப்படி ஒரு காலத்தால் அழிக்கமுடியாத காவியத்தை உருவாக்கினார்கள்.- என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.

கொரோனா, பொருளாதார சீர்குலைவு போன்ற பிரச்சனைகளை மறந்து சற்று நேரம் சிரிக்க, ரசிக்க, உதவும், இந்த கதை.

இதனை இ- புத்தகமாக வெளியிடும் புஸ்தகாவுக்கு எனது நன்றிகள்.

- காலச்சக்கரம் நரசிம்மா

Kaadhalikka Neramillai Uruvana Kathai