Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
முன்னோடி மெளனப்படத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் முதலில் கற்றுக்கொண்டது கேமராவை எப்படி இயக்குவது என்று தான்.லூமியே சகோதரர்களின் முதல் மெளனப் படம் 1896ல் பம்பாய நகரிலும் ,7-7-1897 அன்று சென்னையிலும் பின்னர் நாட்டின் பிற பகுதியிலும் திரையிடப்பட்டது.அப்போது அத்தகைய திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வம் நம் நாட்டினருக்கு ஏற்பட்டது.அவர்களில் பெரும்பாலானோர் புகைப்படக்காரர்களாகவே இருந்தனர். எட்வேர்டு மைபிரிட்ஜ் , வில்லியம் ஃப்ரீட்ஸ்கின் , லூமியே சகோதரர்கள் ஆகியோர் அடிப்படையிலேயே புகைப்படக் கலைஞர்கள்.இந்தியாவின் முதல் ஆவணப் (மெளன) படத் தயாரிப்பாளரான தஞ்சாவூர் மருதப்ப முதலியார்; ஹரிச்சந்திரா என்ற முதல் மெளனப் படத்தை 1913ல் உருவாக்கிய தாதாசாகிப் பால்கே ;மற்றும் தென்னிந்தியாவில் "கீசகவதம்" என்ற முதல் மெளனப் படத்தை 1916ல் உருவாக்கிய நடராஜ முதலியார் ஆகியோரும் புகைப்படக் கலை விற்பன்னர்களே.- இப்படி திரைத்துறையின் ஒளிப்பதிவு தோன்றிய வரலாற்றுச் செய்திகள் ,தமிழ்ப் படங்களில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய 30 பேர் மற்றும் அவர்கள் பணியாற்றிய தமிழ்ப் படங்கள் குறித்த விவரமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.