Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
வரலாறு தெரிந்தவர்கள்தான் வரலாறுகளை படைக்கமுடியும், வரலாற்றினைபற்றிபேசமுடியும்.குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதவியல் துறையில் அவைகளை பற்றிய வரலாறுகள் பெரும்பாலும் ஆய்வுகளுக்கு தேவைப்படுகின்றன.
அந்தவகையில் பேராசிரியர் இரா. பிரபாகரன் அவர்கள் எழுதிய பேசும் கணிதம் என்ற நூல் மிகவும் முக்கியமானது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தெளிவான முதல் தமிழ்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் நிறைய கணிதவியல் கதை புத்தகங்களை படித்திருக்கிறேன். அதிலிருந்து பேசும் கணிதம் என்ற கதைபுத்தகம் வேறுபட்டது. இதில் நிறைய கதைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாதது என்னவென்றால் இதுவரை வெளிவராத ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்கள் பற்றிய புதியகதைகள் இந்த புத்தகம் மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பள்ளி மாணவர்கள் படிக்கும் போது கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் கணிதத்தினை எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதினை அவர்கள் அறிய முடியும்.
அந்த வகையில் இந்த புத்தகத்தினை ஒரு குழந்தைகளுக்கான கணித சிறுகதை இலக்கியம் என்று கூட சொல்லலாம். கொக்குஎப்படிபறக்கும்?, சர்வரிடம் கணக்கு புதிர், சிரிப்புதான் பதில், நட்புக்கான எண்களின் கோட்பாடு, பம்பாயிலிருந்து லண்டனுக்கு நேர்கோடு போன்ற கதைகளெல்லாம் என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றன. இதுபோன்ற கதைகள் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் கட்டாயமாக இடம் பெற்றால்தான் கணிதவியல் வரலாறு அனைவருக்கும் போய் சேரும்.
இந்நூல் கல்வித்துறையில் உரியவர்களிடம் எடுத்து செல்லப்பட்டு பாடநூல்களில் சேர்க்கப்படவேண்டும் என்பது என்விருப்பம் இதுபோன்ற கணித உண்மைகளை வாழ்வியல் உண்மையோடு சேர்த்து தாய்மொழியில் நிறைய புத்தகங்களை நண்பர் கணிதாச்சாரியார். முனைவர்.ரா. பிரபாகரன் அவர்கள் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முனைவர் .V. வினோபா
துறைத்தலைவர்
முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
தஞ்சாவூர்.